ஆனந்த் பிள்ளையின் அனுபவ சாட்சி

Anand Pillai testimony Tamil

(This is a Tamil translation of the transcript of the Video testimony of Sri Anand Pillai )

“அவர் இல்லாமல் என் வாழ்கை நம்பிக்கையற்ற முடிவுக்கு வந்திருக்கும் . ஆனால் அவருடன் உள்ள உறவில் எனக்கு முடிவற்ற நம்பிக்கை உள்ளது.”                       – ஆனந்த் பிள்ளை

நான்  இந்த உலகில் பிரவேசித்த அனுபவம்.

நான் ஒரு இந்துவாக இருந்தாலும், இந்த கிறிஸ்து இயேசு இரட்சகரை மிகவும் வித்தியாசமான வழியில் அறிந்துகொண்டதால், என் வாழ்கை  கதையைச் சொல்ல வந்துள்ளேன். என் வாழ்கை சரிதம் மிக நீளமானது, விவரமாக அறிவிக்க  விரும்பவில்லை, ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. நீங்கள் அதை நல்ல செய்தி என்றும் அழைக்கலாம், அல்லது அதை கெட்ட செய்தி என்று அழைக்கலாம்.அல்லது இரண்டும் இணைந்ததாக அழைக்கலாம். என் தந்தை ஒரு பெரிய தொழிலதிபர், பர்மா ஷெல் மண்ணெண்ணெய் விநியோகஸ்தராக இருந்தவர், ஒரு குறிப்பிட்ட நாளில், பக்கத்து நிலத்தின் உரிமையாளராக இருந்த ஒருவர் (நகரின் புறநகரத்தில் அமைந்திருந்தது) ஏதோ கட்டுமானத்திற்காக தனது நிலத்தில் ஒரு பாறையை வெடிக்கச் செய்தார். அதிலிருந்து வந்த வெடிப்பு துகள்கள் அருகிலிருந்த, மண்ணெண்ணெய் தொட்டிகள் மீது மோதி, பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 1959ம் ஆண்டு, அன்றைய தினம், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இன்றைய பண மதிப்பின்படி குறைவாக இருந்தாலும். ஆனால் அந்த நேரத்தில் பெரும் நஷ்டமாக இருந்தது, அவர் அதை இழந்தார். அவர்  பெரும் நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. அவரது  அலட்சியத்தால் நடந்ததாக கரணம் காட்டி அவர்  கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த எரியும் செய்தியுடன் அவர் வீடு திரும்புகையில், எனது உறவினர்கள் (வீட்டில் இருக்கும் எனது அம்மாவும்) அவருக்கு ஒரு நல்ல செய்தி இருப்பதாகச் சொல்ல அவரை வரவேற்க வருகிறார்கள். அப்படி என்ன நல்ல செய்தி ? அந்த நல்ல செய்திஒரு மகன் பிறந்தான். அந்தச் சமயத்தில்தான் என் அப்பா மற்றவர்களிடம் தனது இழப்பின் கதையைச் சொன்னார், உடனடியாக அந்த நல்ல செய்தி கெட்ட செய்தியாக மாறியது, ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்த அதே நேரத்தில் வேறொரு அசம்பாவிதம் நடந்தால் அந்த குழந்தை அதிஷ்டம் இல்லாத குழந்தை என்று பல மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லது பேரழிவு அல்லது ஏதாவது நடந்தால், அந்த குழந்தை துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது என்று நம்பப்படுகிறது. அதுவே எனது உலகப் பிரவேசம். நான் பிறந்தபோது எனக்கு வைக்கப்பட்ட பெயர் வெங்கடேஷ், எனது பெரிய தாத்தாக்களில் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது, ஏனெனில் நான் நம்புகிறேன் என்னுடைய இந்த பெரிய தாத்தாவின் மூக்கு எனக்கு இருந்தது, இருந்ததின் காரணமாக எனக்கு அவரின் பெயர் வெங்கடேஷ் என்று எனக்கு சூட்டப்பட்டது .ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று என் தந்தை அதை ஆனந்த் என்று மாற்றினார். நான்  சொல்வது உங்களுக்குத் தெரியும்மகிழ்ச்சி. சமஸ்கிருதத்தில், ஆனந்த் என்பதும்.  மகிழ்ச்சியின் இறுதி வடிவம்ஆனந்தத்தின் இறுதி வடிவம். உங்களிடம் நெருங்கிய எதுவும் இல்லை. இது மிக உயர்ந்த வடிவம்.

என்னை உலுக்கிய மூன்று சம்பவங்கள்.

ஆனால் வாழ்க்கை செல்லச் செல்லநான் என் தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன், வாழ்க்கை செல்லச் செல்ல, தொடர் சம்பவங்கள் நிகழ்ந்தன. எனக்கு 9 வயதாக இருந்தபோது, ​​​​குடும்பத்துக்குள் ஒரு சிறிய குழப்பம் அது விவாதத்தில் முடிந்தது  என்றே சொல்லவேண்டும் , அன்று மாலை வீட்டிற்கு வந்தபோது, ​​​​அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டவுடன், அவர் தட்டை வீசினார். எல்லோரும், “ஏன் அப்படிச் செய்கிறாய்?” என்றார்கள். அவருக்கு சாதம் வழங்கப்பட்டது, ஆனால் அவர், “இல்லை, நீங்கள் எனக்கு புழுக்கள் கொடுக்கிறீர்கள்என்று கூறினார். ஏனென்றால், அவருடைய கண்களுக்கு அந்த உணவு புழுக்களைப் போல தோன்றினது, நாங்கள் அனைவரும் திகைத்துப் போனோம். நாங்கள், “இது சாப்பிடக்கூடிய உணவு தான் என்றோம்.” அவர், “இல்லை, இவை புழுக்கள். அன்று இரவு அவரை தூங்கவைக்க மிகவும் கடினமாக இருந்தது .. இரவு முழுவதும் கலக்கமடைந்தார். அடுத்த நாள் காலை, அவர் பால் பண்ணைக்கு சென்றார் (இது மண்ணெண்ணெய் வணிகத்தின் அதே ஆங்கிலோடச்சு தொடர்புடைய நிறுவனம், (இந்நிறுவனம் ஒரு செழிப்பான பால் வணிகத்தை வழங்கியது). எனவே, பால் கொண்டு வந்ததும், அந்த பால் குவளைகளில்  ஒவ்வொன்றாகச் சென்று  திறந்து பார்த்தார். நாங்கள் அவரிடம்ஏன்?” என்று கேட்டோம்; ஒன்றும் பேசாமல் அவிகளை  கீழே கவிழ்த்து விட்டார். பால் அனைத்தும் சாக்கடையில் சென்று கொண்டிருந்தது. “பசுக்கள் இரத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனஎன்றார். அது சுத்தமான பால் என்பதால் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் அவரது கண்களுக்கு அது இரத்தம் போல் தோன்றியது.

மேலும் அவர் பல நூறு லிட்டர் பாலை கீழே கவிழ்த்து விட்டார். அனைத்து வாளிகளும் கவிழ்க்கப்பட்டன, நிச்சயமாக அவர்மனநலம் பாதிக்கப்பட்டவர்என்று எனது குடும்பத்தின் ஒரு சில படித்த பிரிவினரும் அதே போல் குடும்பத்தில் மத நம்பிக்கையில் அதிகம் பற்றுடைய சில நபர்கள் அவர்தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுருக்கிறார் என்றும் கூற தொடங்கினர் . ஒவ்வொரு நாளும் இந்த உரையாடல் தொடர்ந்தது, அதனால் சில நாட்களுக்கு பின்பு அவர் பெங்களூருவில் உள்ள மனநல மருத்துவமனையான நிம்ஹான்ஸில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு ஊசி மற்றும் சில கடுமையான மருந்துகளுடன் மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார், மேலும் பல விஷயங்கள் நடந்தன, அதற்கு குடும்பத்தில் உள்ள சில மத நம்பிக்கை உள்ளவர்கள் இல்லை, இல்லை, அவரை இது போன்று சிகிச்சை அளிப்பது அவசியமற்றது என்று கூறுவார்கள். மேலும் அவரை சாட்டையால் அடித்தும் மற்றும் கல்லால் அடித்தும் ,சிகிச்சை அளிப்பதாக அவரை துன்பப்படுத்தினார்கள்.ஏன் இப்படிச் செய்கிறீகள் என்று கேட்டதற்கு?”, “உன் அப்பாவைக் கல்லெறியவில்லை, உன் அப்பாவை சாட்டையால் அடிக்கவில்லை. நாங்கள் அவருக்குள் உள்ள அசுத்த ஆவியைத்தான் அடிக்கிறோம என்றனர். இப்படி மேலும் மேலும் துன்பத்துக்குள்ளாக்கப்பட்டார். விரக்தியை என்னால் உணர முடிந்தது. ஒரு நாள், என் தந்தையை கவனிப்பதில் இருந்த சிரமத்தினால், என் உறவினர்கள் மற்றும் என் மாமாக்கள் அவரை ஒரு அறையில் அடைத்துவைத்து விட்டனர். மேலும் இரவு முழுவதும் அவர் யாரிடமோ பேசுவது போல் கத்தி, உரையாடி, வாக்குவாதத்தில் ஈடுபடுவர். பக்கத்து அறையில் இருந்த நான், “ஏன் இப்படி செய்கிறார்?” என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கள் குடும்பத்தில் பல நாட்கள்  யாராலும் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. அவர் தனிமையில் விடப்பட்டார்., அவருடன் யாரும் இல்லை; எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரை தனியாக அறையில் அடைத்து வைத்தோம். ஆனால் அவர் சத்தம் போட்டு கொண்டே இருந்தார்.

இன்னொரு குரலும் கேட்டது. மன நலம் பாதிக்க  பட்டவராகவே அவரை கருதவேண்டியிருந்தது.. காலையில், நாங்கள் எழுந்து கதவைத் திறந்தபோது, ​​​​என் தந்தை தரையில் தூங்குவதைக் கண்டோம், நாங்கள் அவரைத் திருப்பி பார்த்தபோது, யாரோ ஒருவர் அவரை  நகங்களால் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை கீறப்பட்டது போன்ற கீறல்கள் இருந்தன. . உண்மையை சொல்லப்போனால், அந்த கீறல்களை நாமே ஏற்படுத்த முடியாது என்பதை இப்போது உங்களால் அறிந்துகொள்ள முடியும்.. அவை சுயமாக ஏற்படுத்திய கீறல்கள் அல்ல சொல்லப்போனால், வேறொருவர் ஏற்படுத்தியது போல தோன்றியது, அது யார் என்று எங்களுக்குத் தெரியாது. அப்போதுதான் குடும்பத்தின் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வது போல் நடப்பதாக நினைக்க தோன்றியது. மற்றும் அவர்கள், “நிச்சயமாக அவர் தீய ஆவியால் ஆட்கொண்டிருக்கிறார்என்று சொன்னார்கள். என் நீண்ட கத்தியை இங்கு சுருக்கமாகிகொள்கிறேன்., நாங்கள் அந்த வீட்டை விற்க வேண்டியிருந்தது, நாங்கள் பெங்களூரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறினோம். சில மாதங்களுக்கு, பிரச்சனை ஒருவிதமாகத் தீர்க்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு அவர் மீண்டும் துன்புறுத்தப்பட்டார். ஒரு நாள், அவர் தனக்கு தானே பேசிக்கொண்டு வாதிடுவது போல் தோன்றியது. அநேரம் நான் விளையாட வெளியே சென்றிருந்தேன்; என் அம்மா சந்தைக்குப் போயிருந்தார். வீடு திரும்பியபோது தாகமாக இருந்ததினால் தண்ணீர் குடிக்க வீட்டின் கதவை திறக்க முயற்சித்தேன், ஆனால் கதவு உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. நான் கதவைத் திறக்க முயற்சித்தேன், நான் அதை வலுக்கட்டாயமாகச் உடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தபோது, ​​​​என் தந்தை கூரையில் கயிற்றில் தொங்குவதைக் கண்டேன். அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது எனக்கு 10 வயதுதான். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அப்படியே கீழே விழுந்த ஸ்டூலை அப்படியே போட்டுவிட்டு சமையல் அறைக்கு சென்று கயிற்றை எடுத்துக்கொண்டு ஜன்னல் மேல் ஏறிச் சென்று கூரையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுக்க முயன்றேன். உடலைப் தாங்கி பிடிக்க வழியில்லை. உடல் கீழே விழுந்து. கயிற்றை அவிழ்த்துவிட்டு மிகவும் சத்தமிட்டேன். உடனே அனைத்து அண்டை வீட்டாரும் அனைவரும் வந்தனர், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும், ஆனால் மரணத்தின் காரணம் எனக்குப் புரியவில்லை. என் சகோதரி, அத்தை, எல்லோரும் வந்து, என்னை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள், “இல்லை, இல்லை, கவலைப்பட வேண்டாம், உன் அப்பா திரும்பி வருவார்என்றார்கள். ஆனால் என் அப்பா திரும்பி வரவே இல்லை. என் மூத்த சகோதரியும் நானும் ஒரே பள்ளியில்தான்  படித்தோம் ஒன்றாகவே சென்றோம். குழந்தை இல்லாத என் அம்மாவின் தங்கை, “உங்களுக்காக நான் இருக்கிறேன்”  “எனக்கு குழந்தைகள் இல்லை. நீ என் மகன். நான் உனக்காக இருக்கிறேன்.” எனது உறவினர்கள் அனைவரும், “உனக்காக நாங்கள் இருக்கிறோம்என்றார்கள்.

அதன் பிறகு சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, என் மூத்த சகோதரிக்கு திருமணமாகி வரதட்சணை வாக்குறுதி அளிக்கப்பட்டது. நாங்கள் அதைக் கொடுத்தோம், மேலும் தேவைப்பட்டது. முதல் தீபாவளிக்கு, வழக்கம் போல், எனது சகோதரியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வர, என் அம்மா அழைக்கச் சென்றபோது, அங்கே  ​​வாக்குவாதம் ஏற்பட்டது. என் சகோதரியின் கணவர்  சொன்னார் நீ போய் திரும்பி வரும்போது இன்னும் அதிக  நகைகளோடு வரவேண்டும் என்று . அதற்கு என் அம்மா, “சரி தருகிறோம்,அனால் நிபந்தனை போடதீர்கள் என்றார். இப்படியே வாக்குவாதம் நீண்டுகொண்டிருந்தது, அக்கா இல்லாமலேயே அம்மா வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து, மீண்டும் பண்டிகை நாட்களான சங்க்ராந்திற்கும் ,பொங்கலுக்கும்  அம்மா மீண்டும் அக்காவைக் கூப்பிடச் சென்றாள். இந்த முறை, வாக்குவாதம் இன்னும் கடுமையானது. அவர், “சரி! அவள் போகலாம், ஆனால் இன்னும் அதிகமான தங்க நகைகளை திரும்பக் கொண்டு வராவிட்டால் இந்த வீட்டின் சாப்பாட்டில் அவள் கை வைக்க முடியாது என்றனர்”. மேலும் பல விஷயங்கள் கோரப்பட்டன. இதற்கு என் அம்மா சம்மதிக்காமல் திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் அங்கிருந்து அழுதுகொண்டே திரும்பினார்கள், என் அம்மா அழுதுகொண்டு வருத்தமாக இருப்பதை பார்த்து, “அவர்களுடைய  சோகத்திற்கு நான் தான் காரணம்என்று சொன்னாள். அன்றே சமையல் அறைக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். மேலும் இது ஏன் நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவை நடந்து  சரியாக இரண்டு  ஆண்டுகளுக்குப் பிறகு, என் அத்தை, என் அம்மாவின் தங்கை, அந்த நேரத்தில் பத்து ஆண்டுகளாக மலடியாக இருந்தவர், முழுவதுமாக சபிக்கப்பட்டவளாக கருதப்பட்டார். இது உண்மையில் ஒரு மருத்துவ குறைபாடுதான். அவர்களுக்கு கருப்பையில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியிருந்தது, ஆனால் எல்லோரும் சொன்னார்கள், “நீ கடவுளால் சபிக்கப்பட்டிருக்கிறாய், அதனால்தான் உன் கருப்பை அடைக்கப்பட்டுள்ளது என்று“. இப்பேச்சை என் அத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, என் மாமா, கருப்பை அகற்றப்பட்டதை அறிந்த போது, “நீ எனக்கு குழந்தைகளைப் பெற்று தருவது சாத்தியமில்லாத ஒன்று ஆகவே, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன்என்று கூறினார், அதற்கு என் அத்தை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட  மனப்பெண்ணின் பெற்றோர், “உன் மனைவியை அனுப்பிவிடு, அவள் இருக்கும் வரை எங்கள் மகள் நிம்மதியாக வாழ மாட்டாள் என்றனர். அதற்கு என் அத்தை சம்மதிக்கவில்லை. அவர்கள், “நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் ஏன் செல்ல வேண்டும்? நீங்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றால் அந்த குழந்தையை என் சொந்த குழந்தை போல் பார்த்துக் கொள்வேன். தேவைப்பட்டால், நான் வீட்டில் வேலைக்காரியாகக்கூட இருந்துகொள்வேன் என்றார், ஆனால் என்னை அனுப்ப வேண்டாம் என்றார்.

ஆனாலும் வாக்குவாதம் தொடர்ந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, என் மாமாவுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பெண்ணுக்கு உண்மையில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்தி வந்தது. அந்த விரக்தியில் என் மாமா, அத்தையை பார்த்து  “நீ வாழாதே, மற்றவர்களையும் வாழ விடாதேஎன்று திட்டினார். என் அத்தை மிகவும் விரக்தியடைந்து சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்கள். இது நடந்தபோது, ​​நான் என்னையே கேள்வி கேட்டுக்கொண்டேன், “மரணத்திற்கு பதில் உண்டா? மரணம் ஏன் நடக்கிறது? துன்பம் ஏன் நடக்கிறது?”. நான் நினைக்கும் ஒவ்வொரு கடவுளையும் வணங்கினேன், ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை. பின்னர் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அந்த நேரத்தில் பதினாரறை வயது ஆனா என் இளைய சகோதரிக்கு  எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. . அவளை கித்வாய் மெமோரியல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு அழைத்துச் சென்றோம், அவளை பரிசோதித்த டாக்டர் சொன்னார், “அவள் ஐந்து மாதங்களுக்கு மேல் வாழ மாட்டாள். 4-5 மாதங்கள். அவ்வளவுதான் என்றார்“. நாங்கள் அவளை மருத்துவமனையில் இருந்து கொண்டு வரும்போது, ​​நான் சொன்னேன், “இன்னொரு மரணத்தைக் காண நான் இந்த வீட்டில் நான் வாழப் போவதில்லை. நான் வீட்டை விட்டு ஓடி விட்டேன்.” என்னால் வீட்டில் படிக்க முடியவில்லை. எனக்கு நிம்மதி இல்லை, அதனால் வீட்டிலிருந்து வேறொரு இடத்திற்கு வந்துவிட்டேன். என் அம்மாவின் முழு கவனமும் என் தங்கையை கவனித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எனக்கு ஆறுதல் கூற முயற்சித்தனர், ஆனால் என்னை சமாதான படுத்த முடியவில்லை, நான் நினைத்தது போல் வீட்டை விட்டு ஓடிவிட்டேன். ஆனால் நான் இறந்தபிறகு சொர்க்கத்திற்கு செல்வேனா அல்லது நரகத்திற்கு செல்வேனா என்று தெரியாததால், என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள என்னால் முடியவில்லை. என்னிடம் அதற்கான பதில் இல்லை. இப்படி, சில மாதங்கள் கடந்தன, டிசம்பர் மாதத்தில், நான் விட்டுச் சென்ற எனது புத்தகங்களில் ஒன்றை சேகரிக்க வீட்டிற்கு திரும்ப சென்றேன். நான் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அங்கே நிறைய உறவினர்கள் இருப்பதைக் பார்த்தேன். 

என் சகோதரி மூன்று  நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று தெரியவந்தது.. என் உறவினர்கள் அனைவரும், என்னை பார்த்ததும் சாபம் விட்டு என்னை திட்டினார்கள், கூச்சலிட்டார்கள், அவர்கள் என்னைப் பெயர் சொல்லி அழைத்து; “நீ சபிக்கப்பட்ட மகன்,உன் உடன் பிறந்தவளின் உயிரை கொண்டுசெல்ல பிறந்தவன் என்று எல்லாரும் என்னை பார்த்து கூச்சலிட்டனர் . அக்கூட்டத்தில் ஒருவராயினும் நான் படும் பாடுகளைப்பற்றியோ ,போராட்டங்களைபற்றியோ சிந்திக்கவில்லை. அப்போது நான், அவர்களை பார்த்து, எல்லாரும் கேட்டுக்கொள்ளுங்கள்,நான் அதிக  நாட்கள் இங்கே இருக்க போவது இல்லை,இன்னும் மூன்று மாதத்திற்குள் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றேன். (ஐந்தாம் நாளுக்குப் பிறகு மரித்தவளுக்காக ஒரு  சடங்கு நடைபெறஇருந்தது) நான் காத்திருக்கப் போவதில்லை. மூன்றாவது மாதத்திற்குப் பிறகு, நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றேன்.

என் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சி

நான் உங்களுக்கு கதை சொல்ல வாழ்கிறேன். அதனால், மூன்றாவது மாதத்தில், மார்ச் 14 அன்று, எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, என் அப்பாவைப் போலவே நான் என் வாழ்க்கையை முடிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் கயிற்றைக் கட்டிக்கொண்டு என் கழுத்தை கயிற்றில் நுழைக்க முற்படுகையில், அலமாரி திறந்திருப்பதைக் கண்டேன், அதில் ஒரு புதிய ஏற்பாடு இருந்தது, பள்ளியில் படிக்கும்போது எனக்கு கொடுக்கபட்டது. இந்த  புதிய ஏற்பாட்டை விநியோகிக்கும் கிதியோன்கள் என்ற அமைப்பால் எனக்கு வழங்கப்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு கொடுக்கப்பட்டது , அதை எதற்காக பள்ளிகளில் கொடுத்தார்கள் என்று என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை.ஆனால்  அதின் பக்கவாட்டில்  பூசப்பட்டிருந்த தங்க நிறம் அதை வைத்து கொள்ள ஆசையை தூண்டியது.சரி நான் வைத்து கொள்கிறேன்.இன்று இன்னு சில வினாடிகளில் நான் மரிக்கப்போகிறேன், அதற்கு முன்பு இதை நான் படிக்காமல் இறந்து விட்டால் , அதிலிருந்து ஏதோ இழந்துவிடுவேனோ என்ற எண்ணம் தோன்றியது .சரி ,எனக்கு இயேசுவை பற்றித்தெரியும் , அவரை பற்றி ஒரு நல்ல மதிப்பு என் மனதில் இருந்தது.ஆனால் அவரை எல்லா தெய்வங்களிலும் ஒருவர் என்று எண்ணினேன்.சரி இன்னும் சற்று நேரத்தில் மரிக்க போகிறேன்.இதில் என்ன முன்னுரை இருக்கிறது அதை படித்துவிட்டு நான் சாகவேண்டும். அதை திறந்தபோது அதில் முன்னுரை ஏதும் இல்லை. இது என்ன புத்தகம் முன்னுரையே இல்லாமல் எழுதி இருக்கிறார்கள் என்று எண்ணினேன்.அடுத்த இரண்டு பக்கங்களை புரட்டினேன். ஒரு பக்கம் நீங்கள் துக்கத்தில் இருக்கும் போது, உங்களுக்கு மகிழ்ச்சி தேவைப்படும் போது என்று இரண்டு தலைப்புகளின் கீழ் வசனங்களின் அட்டவணை கொடுக்கபட்டிருந்தது. அது போன்ற பதில்களில் நான் திருப்தியடையவில்லை.அடுத்த பக்கங்களை நான் புரட்டினேன்.மற்றும்  ஒரு தலைப்பில் அந்த பக்கம் கிறிஸ்தவ நற்பண்புகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, மகிழ்ச்சியைப் பற்றி என்ன பேசுகிறது, சமாதானத்தை  பற்றி என்ன சொல்கிறது என்று அட்டவணை இருந்தது. அந்த நேரத்தில், நான் சமாதானத்தை தேடினேன்.. அதனால் நான் சமாதானம் என்ற தலைப்பில் இருந்த பக்க எண்ணை புரட்டினேன்.சில வசனம் எழுதப்பட்டதுயோவான் 14:27. அந்த வசனத்தை எப்படிப் கண்டுபிடிப்பது என்று எனக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்ததால், நான் அந்தப் பக்க எண்ணுக்குச் சென்று அந்த வசனத்தைப் படித்தேன், அந்த வசனத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.  “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாகஇது மிகவும் உறுதியான மற்றும் அதிகாரமிக்க வசன அறிக்கையாக இருந்தது. நான் முன்னும் பின்னும் உள்ள வசனங்களை புரட்டி யார் சொன்னது என்று பார்க்கும் போது, ​​கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் சொல்கிறார் என்று தெரிந்துகொண்டு, “ஆஹா! அவர் தன்னுடைய சமாதானத்தை கொடுக்கிறாரா ?, மேலும் அவர் ஒரு ஒப்பீட்டையும் கொடுக்கிறார்.” “உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.“. நான், “, நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்என்றேன். அப்போதுதான் நான் யோவான் பத்தாம் அதிகாரம் பத்தாம் வசனம் கண்டு தடுமாறியபோது, ​​“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்  என்று படித்தேன். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் அவர் வாழும் மக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் என் வாழ்வில்  கிறிஸ்து இல்லாமல் மட்டுமே இருந்தேன். நான், “இதோ, எனக்கு வாழ்வு கொடுக்க வந்தவர்என்றேன். நான் மற்றுமொரு வசனத்தை வாசிக்க தொடங்கினேன், மற்றொரு புத்தகம், ரோமர்  5 ஆம் அதிகாரம் 8ஆம் வசனம். நான் அதைப் படித்தபோதுஅதுதான் திருப்புமுனை! ஏனெனில் அந்த வசனம் கூறுகிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்எவ்வளவு  உண்மையுள்ள வார்த்தைகள் ஆஹா! எப்பொழுதாவது கடவுள் எனறு ஒருவர் உண்டென்றால் அவர் இவர்தான். இவரையே நம்பே விரும்புகிறேன். நான் ஏற்கனவே பாவியாக இருக்கும்போதே, எனக்காக இந்த உலகத்தில் வந்தார்,நான் நல்லவனாக மாறும்வரை பரிசுத்தம் இல்லாத போதே என்னை பாவத்தில் இருந்து விடுவிக்க, எனக்காக மரிக்கும்படி தன்னுடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பியிருக்கிறார்..அதனால், “இந்தக் கடவுளை நான் நம்ப விரும்புகிறேன்என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நான் புத்தகத்தின் இறுதிக்குச் சென்றேன், சில பிரார்த்தனைகள் எழுதப்பட்டன, ஆனால் நான் ஒரு எளிய பிரார்த்தனை செய்தேன். மேலும் அந்த பிரார்த்தனைஅன்புள்ள கடவுளே, நீர்  ஒரு கிறிஸ்தவ கடவுள். மேலும் நான் ஒரு இந்து, உங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். என்று முடித்தேன், ஒரு ஜெபத்தை எப்படி ஜெபிக்க வேண்டுமோ அப்படி நான் ஜெபிக்கவில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் இருந்தது. எனவே மீண்டும் நான் , மதிப்புள்ள வார்த்தைகள் “உம்மை”, “நீர்” என்ற வார்த்தைகள்  பயன்படுத்தி ஜெபம் செய்தேன். நான் படித்த பள்ளியில் இப்படிப்பட்ட வார்த்தைகள் ஜெபத்தில் பயன்படுத்தப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆமென் சொல்வதையும் தவிர்க்கவில்லை. இப்போது ஒரு மன நிறைவு, கடவுள் என் விண்ணப்பத்தை கேட்டிருக்கிறார் எனறு. கடவுள் என் முதல் ஜெபத்தைக் கேட்டார் 

அன்று மாலையே, வேகமாக கயிற்றை அவிழ்த்து எறிந்தேன். என்னுடைய இன்னொரு நண்பரைச் சென்று சந்திக்க வேண்டியிருந்தது, நாங்கள் இருவரும் இணைந்து ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருதோம். எங்கள் மாலை நேர  படிப்பை  தொடங்கியபோது,எனது நண்பன் என்னை பார்த்து  “நான் என் படங்களை படித்துவிட்டேன், நீ உன் படங்களை படித்துவிடயா  என்றான் “.நான் சொன்னேன், நான் என் பாட பகுதியை முடிக்கவில்லை, (நான் மின்சாரம் மற்றும் காந்தவியல் படிக்க வேண்டும், அவன்  ஸ்டாட்டிக்ஸ் மற்றும் டைனமிக்ஸ் படித்திருக்க வேண்டும்) “இல்லை, நான் வாழ்க்கையை மீண்டும்  பெற்றேன், என் முழு வாழ்க்கையும் எனக்கு கிடைத்தது“. அவன் என்னை குறும்பாக உதைத்துவிட்டு, “ஏய் ஏமாற்று காரா ஆனந்த் ! நான் என் வேலையைச் முடித்துவிட்டேன், இப்போது நீ  என்ன செய்யப் போகிராய்?”.இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, “கொஞ்சம் பொறு.நீ இதற்கு முன்பு  என்ன வார்த்தை பேசினாய்  “முழு வாழ்வு“, “உன் காலம் முழுவதும்என்று சொன்னாயா ?. எப்படி இந்த வார்த்தையை  பயன்படுத்தினாய் என்று ஆச்சரியத்தோடு கேட்டான்“. “இன்று ஒரு புதிய  புத்தகத்தைப் வாசித்தேன்அதன் வாயிலாக இதை அறிந்தேன் என்றேன். உடனே அவர் என்னிடம், “இயேசுவைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறாயா என்றான”, கொஞ்சம் பொறு, அதுதான் நான் சற்று முன்பு ஜெபித்த ஜெபம். உனக்கு எப்படித் தெரிந்தது?”. அவர், நீ ஜெபித்து பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதை மட்டும் சொல் நீ அவரை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா?, “ஆம், நான் நிச்சயமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்என்றேன். அதற்கு அவர், “சரி, என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு விஞ்ஞானி. அவர் மின்னணுவியலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றவர் அவர் இதை பற்றி அதிகம் உன்னோடு பேசுவார்”. சற்று நில் ,எலக்ட்ரானிக்ஸில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர்  எப்படி இயேசுவை பற்றி கூறுவார் என்றேன். “இல்லை, இல்லை, இந்த நபர் ஒரு விசிட்டிங் ப்ரொஃபசர். அவர் வந்து உனக்கு சொல்லுவார் என்றான் ”. 

அதன்  பின்பு டாக்டர் கிரஹாம் பிரெஞ்ச் என்னிடம் வந்தார், அவரை பார்த்து நான் கேட்டேன், “நீங்கள் என்னிடம் ஒரு பிரசங்கியார்போல் கைகளை நீட்டி ,மடக்கி ,சுட்டு விரல் கட்டி என்னிடம் பிரசங்கம் செய்ய போகிறீர்களா என்று கேட்டேன் ?”. அவர் ” நிச்சயமாக இல்லை,  நான் என் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். மேலும் அவர் எலக்ட்ரானிக்ஸ் மீதான தனது ஆர்வத்தை பற்றி பேசினார் – இது எனக்கு மிகவும் பிடித்த பாடம். மேலும் அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அது என்னை திடுக்கிட வைத்தது, அவர் இவ்வாறு கூறினார்: “21 வயதில், நான் ஒரு பாவி என்பதை உணர்ந்தேன். நான் கிறிஸ்து இயேசுவை என் வாழ்வில் ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானேன்”.என்றார். “கொஞ்சம் பொறுங்கள்  டாக்டர் கிரஹாம், நீங்கள் ஒரு விஞ்ஞானி அல்லவா ? நீங்கள் திறமையான மாணவன் அல்லவா? அப்படி இருக்க நீங்கள்  ஒரு பாவி என்பதை எப்படி உங்களால் ஒப்புக்கொள்ளமுடிகிறது ?”. அவர், “கேளுங்கள், நீங்கள் சொல்வது சரிதான். ஒரு வகையில்  என் நண்பர்களின் பார்வையில், நான் ஒரு திறமையான  மாணவனாக இருக்கலாம் . என் பெற்றோரின் பார்வையில் நான் கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாக இருக்கலாம் . என் ஆசிரியரின் பார்வையில் நான் புத்திசாலி அல்லது மேதை. ஆனால் கடவுளின் பார்வையில், தன் எல்லா நிலைகளிலும் உயர்த்துஇருக்கும் கடவுளோடு ஒப்பிடும்போதும் அவருடைய மகிமைக்கு முன்னாள் நான் கொஞ்சமும் ஒப்பிட முடியாத நில்லயில்தான் இருக்கிறேன். மாறாக, ஒப்பீட்டளவில், நான் ஒரு பாவி. உடனே  நான், “சரி, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி வாழ்வில் மாற்றம் பெற்றீர்கள் , எப்படி கிறிஸ்தவர் ஆனீர்கள்? நீங்கள் கிறிஸ்தவராகப் பிறக்கவில்லையே?” அவர், “இல்லை” என்றார். யோவான் 1ஆம் அதிகாரம்  12-13  வசனங்களில் உள்ள இந்த வசனத்தை அவர் என்னிடம்  பகிர்ந்து கொண்ட போது தான் – “நீங்கள் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறக்கும் போது அவருடையபிள்ளையாக  மாறவில்லை .  அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே அவருடைய பிள்ளையாக  இருக்கிறீர்கள் என்றார்.சரி, “இது எப்படி நடந்தது என்று கேட்டேன் ?” மேலும் அவர், “நான் ஒரு ஜெபம்  செய்தேன்” என்றார். பின்னர் நான் அவரிடம் “அதன் பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவர் அந்த நிமிடத்திலிருந்து நான் ஒரு புதிய மனிதனாக மாறிவிட்டேன் என்றார்.

 மீண்டும் அவரிடம் கேட்டேன் , “நீங்கள் புதிய மனிதன் என்று எப்போது நம்புனீர்கள் ?” என்றேன். பின்னர் அவர் பைபிளில் உள்ள மற்றொரு வசனத்தைப் வாசித்து காண்பித்தார் , மேலும் என்னுடைய ஒவொரு கேள்விக்கும்  கேள்விக்கும் பைபிள் வசனத்துடன் பதில் அளிப்பதில் மிகவும் கவனமுள்ளவராக இருந்தார் .     2 கொரிந்தியர் 5ஆம் அதிகாரம்  17 ஆம் வசனத்தை காண்பித்தார் . அதில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது , “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின..

 இப்பொது நான் என்ன செய்ய வேண்டும்  என்று கேட்டேன் ?” அவர் ஜெபிக்கும்போது நானும் அவரோடு சேர்ந்து ஜெபிக்க கேட்டுக்கொண்டார். எனவே, நான் அவருக்குப் பிறகு ஜெபித்தேன், இப்படி அவர் சொல்லுகிற ஜெபத்தை செய்வதால், நான் ஒரு புதிய சிருஷ்டியாக மாறப்போவதாக எதிர்பார்த்தேன், “இல்லை, நான் இன்னும் அப்படிப்பட்ட அனுபவத்தை பெறவில்லை என்பதை உணர்தேன். நீங்கள் என்னை ஏமாற்றி வவிட்டீர்கள் என்றேன். நான் இயேசுவை ஏற்றுக்கொண்டால் ஒரு புதிய படைப்பாக மாறுவேன் என்று நீங்கள் இப்போது தானே  சொன்னீர்கள். அவர் “இல்லை, ஒரு புதிய நபராக மாறுவதற்கான அனுபவம் தொடங்கிவிட்டது என்றார். பின்னர் அவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிஇந்த அனுபவத்தை உணர்ந்தார்  (அப்போது அவருக்கு 45 வயது) என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார், அவர் இதை ஏற்றுக்கொண்டபோது, அவருடைய வாழ்க்கையில் மாற்றங்களை சந்தித்ததை கூறினார், மேலும் இத்தோடு இது முடியவில்லை,மாற்றம் தொடர்கிறது என்று கூறினார். நான் அவரிடம்  “நீங்கள் இப்பொது என்னை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுவேன்  என்று சொன்னீர்கள். அதற்கான பதிலை பதிலைக் சொல்லுங்கள் என்றேன், அது எப்படி நடந்தது விளக்கம் கொடுங்கள்? என்றேன். பின்னர் அவர் பைபிளில் இருந்து ஒரு வசனத்தை குறிப்பிட்டு பதிலளித்தார், 2 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம்  18 ஆம் வசனமத்தில் , இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது  “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” என்று கூறுகிறது. இப்போது நான் உடனடியாக ஒரு புதிய மனிதனாக மாற விரும்பினேன், புதியதாக மாறுவதற்கான இந்த தொடக்கத்தை  என் வாழ்வில் ஏற்றுக்கொண்டேன்.

கிறிஸ்துவின் மூலம்முடிவற்றநம்பிக்கை

இப்போது என்னால் அந்த மாறுபட்ட வாழ்வை தொடர முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது,இதில்  சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,1979ஆம் ஆண்டு, மார்ச் 14ஆம் தேதி,மாலை 4.30 மணிக்கு இந்த முடிவை எடுத்தேன். அதன் பிறகு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்ற கல்லூரிக்கு சென்று, எனது கணினி அறிவியல் படிப்பை முடித்து, நிர்வாகப் பயிற்சிக்கு DCM-ல் தேர்வானேன். டாடா நிறுவனத்தில்  சேர்ந்து  10 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தேன்,பின்பு  2 அமெரிக்க நிறுவனங்களுக்குச் சென்று அங்கும் வேலை செய்தேன், தற்போது வேளையில் இருக்கும் இந்த பேராசிரியர் பணிக்கு முன் 14 ஆண்டுகள் HCL தொழில்நுட்பத்தில் பணியாற்றினேன் . நான் ஒரு முழுமையான, அதை எப்படி வார்த்தைகளால் விவரிப்பேன், அது ஒரு மகிழ்ச்சியான பயணம்.,அது ஒரு இன்பமான அனுபவம் ‘ என்று சொல்வதா ?,எல்லாம் சுலபமாக இருந்ததனால் அல்ல, எல்லாம் கடினமான சூழ்நிலைகளாக  இருந்தன. ஆனாலும்  சிரமங்களுக்கு மத்தியில் எனக்கு வலிமை இருந்தது, சக்தி இருந்தது. என்னுடனே கூட இருக்கும்  ஒருவரால் நான் அழைக்கப்பட்ட வாழ்க்கையை வாழக்கூடிய பெலன் எனக்குள் வந்ததை உணர்தேன்.  ஏனென்றால் கர்த்தராகிய இயேசு யோவான் 16 ஆம் அதிகாரம்  வசனம் 33 இல், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று கூறினார். மேலும் நாம்  மிகவும் போட்டி நிறைந்த வாழ்க்கையைக் வாழ்ந்து கொண்டிருகிறோம் . நாம் வாழும் உலகம் அவ்வளவு எளிதானது அல்ல. நம் வாழ்க்கைக்கான மதிப்பீடு நாம் விருப்புகிற பிரகாரம் கிடைப்பது இல்லை.  ஒரு வேலை நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருப்பீர்கள். அந்த சிரமத்திற்கு மத்தியில், உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கிறது. அது எனக்கு நடந்தது. என் வாழ்நாளில் 33 வருடங்கள், இந்த ஒரு விஷயத்தை நான் தொடர்ந்தேன். முடிவில், நான் உங்களுக்குச் சொல்லவிரும்புவது இதுதான், நான் உன்னோடு என் வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து நீ அறிந்திருப்பாய், ஆரம்பத்தில் கிறிஸ்து இல்லாமல் நம்பிக்கையற்ற என் வாழ்கை முடிவுக்கு வந்திருக்கும். . ஆனால் கிறிஸ்துவின் மீது எனக்கு முடிவில்லா நம்பிக்கை வந்தது . என் தந்தை நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார், எனவே என் பெயரை வெங்கடேஷ் என்பதில் இருந்து ஆனந்த் என்று மாற்றினார். என் உலக தந்தையின் நோக்கத்தை  என் பரலோகத் தந்தை என்  வாழ்வில் சாத்தியமாக்கினார் . இப்போது ஆனந்த் என்பது என் பெயர் மட்டுமல்ல. நான் ஆனந்தனாக வாழ்கிறேன் . இப்போது நீங்கள் என்னை கூகிள் செய்து எனது அனைத்து தொழில்முறை சாதனைகளையும் பார்க்கலாம். நான் இப்பொழுது வாழும் நோக்கத்துடன் ஒப்பிடும்போது அதெல்லாம் வாழ்க்கையின் பிழை என்றே சொல்லவேண்டும்.. அதைத்தான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்த்து பிறப்பு என்பது ஒரு கொண்டாட்டமாக மாறியிருக்கிறது, இயேசு கிறிஸ்து இப்படிதான் பிறந்தார், அல்லது அவர் இந்த நாளில் பிறந்த, அல்லது இந்த மாதத்தில்தான் பிறந்தார் என்ற பல காரியங்கள் பேசப்பட்டாலும், என்னைப் பொறுத்த வரையில், கிறிஸ்து என் வாழ்க்கையில் வந்தார். என் வாழ்வில் கிறிஸ்துமஸ் என்பது 1979ஆம் ஆண்டு,மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. அந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துமஸ் உங்களுக்காக தொடங்கும். நான் கிறிஸ்துவை என் வாழ்க்கையில் எப்படி அனுபவித்தேன் என்பதைப் பகிர்ந்துகொள்ளும் இந்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இன்னும்  என் தொழில்சார்  உலகில் தொடர்ந்து இருந்தாலும். என்னுடைய  கார்ப்பரேட் உலகில் தொடர்ந்து இருந்தாலும் என் வாழ்க்கையின் அர்த்தம் உணர்ந்தவனாக, ஒரு புதிய மனிதனாக மற்றும்  இந்த உலகில் வாழ்வதற்கான நோக்கத்தை அறிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ஒரு  நிச்சயத்துடன் வாழ்த்துக்கொண்டிருக்கிறேன்  இப்பொது எங்கே இருக்கிறேன் என்ற உணர்வோடு வாழ்கிறேன். அதுவும் முக்கியமான விஷயம். நன்றி.