தனிமைக்கான பதில்

Tanimai

 

தனிமை: கோவிட்-19 தந்துள்ள முக்கிய வெகுமதி

கோவிட்-19 பல வெகுமதிகளோடு உலகில் நுழைந்தது. மரணம் மற்றும் தூரம் மட்டுமல்ல. ஆம், அதன்மூலம் வந்துள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தனிமை. மனிதர்கள் இயல்பாகவே சமூக உயிரினங்கள், அதாவது சமூகத்தை சார்ந்தே வாழ்பவர்கள். மற்றவர்களுடன் நீண்ட காலமாக தொடர்பைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் வரும்பொழுது , அது நம்மை ஆழமாக பாதிக்கிறது. சிறைகளில் நிறைவேற்றப்படும் மிக மோசமான தண்டனைகளில், தனிமைச் சிறையும் ஒன்று என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. தீர்வு அனைத்து நேரங்களிலும் மக்கள் நம்மைச்சுற்றி இருப்பதல்ல. அது உதவுகிறது என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உதவுகிறது. நீங்கள் தனிமையாக உணர   தனியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் ஒன்றாக இருந்தும்கூட  இன்னும் தொலைவில் இருப்பதுபோல  உணரலாம்.

‘தனிமை’ என்பதை எவ்வாறு விவரிக்கலாம் ?

அப்படியானால், தனிமை என்றால் என்ன? அன்னை தெரசாவின் வார்த்தைகள் இதை புரிந்துகொள்ள உதவலாம்: ” தனிமை என்பது மிகவும் பயங்கரமான வறுமை, மற்றும் நேசிக்கப்படாத உணர்வு.” ‘என்னை நேசிக்க யாருமே இல்லை என்ற உணர்வு’. அனைத்து நண்பர்கள், குடும்பம், மனைவி, குழந்தைகள், செல்லப்பிராணிகள், பின்பற்றுபவர்கள், சந்தாதாரர்கள், விருப்பங்கள், பங்குகள் ஆகிய எதுவுமே போதாது என்ற உணர்வு. ஒரு வெற்றிடம், நிரம்ப மறுக்கும், இதயத்தில் காணப்படும் ஒருவித வெறுமை உணர்வு. தனிமையிலிருந்து வெளியேற எந்த பயனுள்ள வழியும் இருப்பதாக தெரியவில்லை . மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து தீர்வுகளும் தற்காலிகமானவையே. அவைகள் வெறுமனே திசை திருப்பலாம். இருப்பினும், ஒரு தெய்வீக உறுதிவாய்ந்த தெளிவான தீர்வு உள்ளது.

தனிமைக்கான தெளிவான தீர்வு

வேதத்தின்படி சிருஷ்டிப்புக்கு பின்னர்  கடவுள் கையாண்ட முதல் பிரச்சனை தனிமை என்பது  உங்களுக்கு தெரியுமா? ஆதியாகமம் 2:18- இல்,” பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” பின்வரும் வசனங்களில், அவர் அவ்வாறு செய்கிறார். இன்னும் பல வேதாகம கதாபாத்திரங்கள் தனிமையை எதிர்கொண்ட நிகழ்வுகள் வேதத்தில் உள்ளன. எனினும், ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று இயேசு கிறிஸ்து தனது வாழ்வில் தனிமையை அனுபவித்திருக்கிறாரா என்று பார்ப்போம். அதிசயமான அற்புதங்களை செய்தவர், பரிகாரி, தன்னால் மீட்கப்பட்டவர்கள்  தன்னை  சூழ்ந்திருந்த போதும், மரண தண்டனை விதிக்கப்பட்டார். “அவரை சிலுவையில் அறையுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை தனியே விட்டுச்சென்றனர்; சிலர் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று சத்தியம் செய்தனர்.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.” ஏசாயா 53:3.

நாம் பார்த்தபடி  இயேசு, கடவுளின் அவதராமாய் இருந்தும் அவர்மாத்திரமே நம்முடைய தனிமையில் நமக்காய் உண்மையாய் பரிதபிக்க முடியும். அவர் ஏன் இதைச் செய்தார்? தன்னை சிலுவையில் அறைய அனுமதிக்க இயேசுவை  தூண்டியது எது? என் நண்பா, பதில் என்னவென்றால், தனிமைக்கு தெய்வீக தீர்வு காணவே. அவர் நம்மை நேசித்ததால்.

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”  ரோமர் 5:8.

இந்த தெய்வீக, முடிவில்லாத அன்பு  மட்டுமே உங்கள் இதயத்தில் காணப்படும்   வெற்றிடத்தை நிரப்ப உறுதியளிக்கிறது. பாருங்கள், மனிதர்களாக, ஒரு குறிப்பிட்ட அளவு  மட்டுமே பிறருக்கு நம்மால் அன்பை வழங்க முடியும். தேவைப்படுவோருக்கெல்லாம் நம்  அன்பை முழுமையாக   பகிர்ந்துகொள்வதென்பது முடியாத ஒரு காரியம். ஏனெனில், பின்னர், நாம் கூட அதே சூழ்நிலைக்குள்ளாக  செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் ஒரு நபருக்கு உதவ நம்மால் முடியாது.அப்படி செய்வதால் நாம் உணர்ச்சிரீதியாக  வடிகட்டியதாக உணரக்கூடிய சாத்தியம் உள்ளது. இதனால்தான் மனநல மருத்துவர்கள் அல்லது ஆலோசகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் பேசுகிறார்கள். அதனால் அது அவர்களை மூழ்கடிக்காது. எனவே, நம்மை நேசிக்க  ஒரு நித்திய ஆதாரம் வேண்டும். இயேசு கிறிஸ்து என்ன வாக்களிக்கிறார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.” மத்தேயு 11:28.